.
இது ஒரு உண்மை சம்பவம். பெயரும், இடமும் மாத்தியிருக்கேன்.
இது கதையோ, சமூக விழிப்புணர்வு கொண்ட கட்டுரையோ இல்லைங்க. சமீபத்திலே எங்களுக்கு மிகவும் பரிசயமான குடும்பத்திலே நடந்த ஒரு துயரமான சம்பவம். அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு.
திரு சர்மா தம்பதியினர்க்கு 80+ க்கு மேலே இருக்கும். அவர் பிறந்தது , வளர்ந்தது , வேலைக்குப் போய் ரிடையர்டு ஆனதுக் கூட இதே ஊர் தான். அதாவது ஒரே ஏரியாவிலே 2-3 தலைமுறையா குடியிருக்காங்க. அவருடைய தாத்தா காலத்திலேயிருந்து அதே வீடு, அதே பரிசயமான அக்கம்-பக்கத்து குடும்பம். காலம் மாற மாற, அக்கம்பக்கத்திலே இருக்கும் வீடெல்லாம் பிளாட்டாகவும், அடுக்குமாடி கடைகளாவும் மாறின. திரு.சர்மாவின் வீடும் இன்னும் விரல் விட்டு எண்ணக்கூடைய சிலரஓட வீடுகள் மட்டுமே "அந்த நாள்" ஞ்யாபகத்தை நமக்கு நினைவுப்படுத்தியது. சுருக்கமா சொல்லணும்னா... இப்போ இவங்க ஏரியா ஒரு Prime locality. இங்க வீடு வாடைக்கு எடுக்கும் காசு இருந்தா , அந்த பணத்திலே கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியாவிலே ஒரு சூப்பர் பிளாட் வாங்கலாம்னா பாருங்க.
திரு.சர்மா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் 4 பேர். எல்லாரும் ( மற்ற எல்லாரையும் போல) வெளியூரிலும், வெளி-நாட்டிலும் செட்டில்லாயிருக்காங்க. வருஷா-வருஷம் 2 முறை வருவாங்க, வாரா-வாரம் எல்லாருமே போண் பண்ணி பேசுவாங்க. இங்க லோக்கலா சொந்தம்ன்னு சொல்லணும்னா கூடப்பிறந்தவங்களுடய குடும்பங்களும், 4 பசங்களுடைய மாமனார்-மாமியாரும் தான்.போண் பண்ணினால் 30 நிமிஷத்டிலே வரக்கூடிய தூரத்திலே தான் எல்லாடுமே. சர்மா தம்பதியரும் சரி, மற்றவர்களும் சரி, கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில இல்லைன்னாலும், extended family மாதிரி எல்லாரும் இவர்கள் வீட்டுக்கு வந்து-போய் தான் இருந்தாங்க. காரணம், ஒண்ணு இங்களுடைய வயசு, இன்னோண்ணு அதனால வரும் உடல்-பிரச்சனைகள். ஸோ, குடும்பத்திலே மற்ற நபர்களும், நண்பர்களும் அப்பப்போ போய்ட்டு வருவோம்.
கடந்த 2 வருஷமா சர்மா ஆண்டிக்கு உடம்புக்கு ரொம்பவே சுகப்படலை. அதனாலே அவருடைய மூத்த மகன் வெளிநாட்டிலிருந்து மூட்டை-முடிச்சு எல்லாம் கட்டி மைசூரு பக்கம் வதுட்டார். இவங்களும் கூடிய விரைவில் அவரோட மைசூரு போய் இருக்கிரதா முடிவு பண்ணிநாங்க. ஆனால் இங்க prime locality லே வீடு இருக்கே. வீட்டை பூட்டிவிட்டு போயிடலாம்ன்னு யோசிச்சா, இது commercial area. பின்கட்டு வழியா உள்ளே வந்து பூட்டியிருக்கும் வீட்டை தப்பு-தண்டா நடத்த பயன்படுத்திடுவாங்களொன்னு பயம். என்னதான் க்ரில் போட்டிருந்தாலும், வீட்டிலே ஆள் நடமாட்டம் இல்லைன்னு தெரிஙஞ்சா சும்மா விடுவாங்களா? அவங்களுக்கு பதுங்க ஒரு டம். ( I am not exaggerating, these kind of things do happen. This is reality)
என்ன தான் ஆனாலும் பிறந்து வளந்து வாழ்ந்து வந்த பூர்வீக வீட்டு. சட்டுன்னு விக்க மனசு வருமா. மன்சை ரொம்பவே திடப்படுத்தி ரெண்டுபேரும் வீட்டை வித்து எல்லாம் formality யும் முடிச்சு மைசூர் போயிடலாம்ன்னு ஒரு வழியா ஒத்துகிட்டாங்க. Word was out on the market. Commerical ஏரியாங்கரதால நிறையபேர் வந்தாங்க, விலைபேசினாங்க(estimated 6 -7 Crores). மைசூரில் இருக்கும் பிள்ளை இந்த விஷ்யமா வாராவாரம் இங்கே வருவார். பின்னாலே பிரச்சனை வரக்கூடாதுன்னு சர்மா அங்கிள் all Whilte வேணும்ங்கிரதிலே மட்டும் தெளிவா இருந்தார். இதனால விலை கம்மியாவந்தாலும் பரவயில்லைனுகூட அபிப்பராயப்பட்டார்.
இப்படி 1 வருஷம் ஆச்சு, full white க்கு யாரும் வரலை. அப்புறம் Economic recession ன்னு தள்ளிப்போச்சு. இதுக்கெல்லாம் நடுவே நாங்க எல்லாடுமே அப்பப்போ அவங்க வீட்டுக்கு போவோம், ஜாலியா இருப்போம், வருவோம். இன்னைக்கு வீடு வித்தா, அடுத்த வாரமே மைசூரு போகணும்ன்னு திட்டத்தோட இருந்தாங்க அங்கிளும் ஆண்டியும். அத்தியாவிசய தேவைக்கு உண்டான சாமான் விட்டு மற்றதெல்லாம் கூட டிஸ்போஸ் பண்ணிடாங்கன்னா அவங்க எவ்வளவு ஆர்வமா இருந்திருப்பாங்க.
இப்படி தான் ஒரு வெள்ளிக்கிழமை எல்லாரும் அவங்க வீட்டு போனோம். பங்கஷண் எல்லாம் இல்லை - நீ போகிராயா – நானும் வரேன் அப்படீங்கிரா மாதிரி ஒருத்தர் சொல்லி, இன்னொருத்தர் வரது. ஆண்டி எங்களுக்காக ஏதேதோ வாங்கி வச்சிருந்தாங்க. ஒரே கூத்தும் கும்மாளாமும்மா இருந்துது. (அடுத்த நாள் சனிக்கிழமை தானே.. லேட்டானாலும் பரவாயில்லை). ஒரு வழியா டாட்டா சொல்லி வீடு வர 10 - 10.30 ஆச்சு.
சரி, சனிக்கிழமை வீக்கெண்ட் மூடிலே இருந்துட்டோம். அடுத்த நாள் (ஞ்யாற்றுக்கிழமை) குடும்பத்தில் ஒருத்தர் சர்மா அங்கிள் கிட்டே பேசணும்ன்னு போண் போட்டிருக்கார், யாரும் எடுக்கலை. மொபைல் ட்ரை பண்ணியிருக்கார், அதுக்கும் பதில் இல்லை. இப்படி காலையிலே 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரைக்கும் பார்த்திருக்கார். மனசு படபக்க, அவர் இன்னொரு சொந்தக்காரருக்கு விஷயம் சொல்ல, பதறியடிச்சு சர்மா அங்கிள் வீட்டுக்கு போயிருக்கார். கேரேஜ் கதவு தாழ்ப்பாள் போடமல் இருக்கிரதை பாற்த்ததும் பீதியோட உள்ளே போய் பார்த்தவருக்கு ஒண்ணில்லே ரெண்டு அதிர்ச்சி. சர்மா அங்கிளையும் ஆண்டியையும் யாரோ கழுத்தை அறுத்து கொண்ணு போட்டிருக்காங்க. ( இந்த சம்பவத்தை இப்போ எழுதும்போது கூட என் கையெல்லாம் நடுங்குது !)
அப்புறம் போலீஸ் வந்தாங்க, விசாரணைன்னாங்க.. இன்னமும் அதே தான் சொல்லிகிட்டு இருக்காங்க. எங்களுக்கு எதுவும் புலப்படலை. அவங்க ரெண்டுபேருமே வயசானவங்க. சும்மா முழியை உருட்டி மிரட்டினாலே பயந்துபோய் காதிலே கைய்யிலெ இருக்கிரதை கழட்டிக் குடுக்கிர சுபாவம் தான் ரெண்டு பேருக்கும். இது மட்டு இல்லை, சின்ன வயசிலே வந்த ஒரு கட்டி (abcess) காரணமாக, சர்மா அங்கிளுக்கு ஒரு கால் ஊனமும் கூட. பயத்திலே உறைஞ்சு போவாரே ஒழிய ஊன்றுகோல் இல்லாம ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. ஆண்டிக்கு ஆஸ்துமா இருக்கு, சத்தமா "திருடன்" ன்னு கத்த கூட முடியாது. இப்படி இருக்க இவர்களை கொல்லத்தான் வேண்டுமா....
கடந்த 2 மாசமா வீட்டிலே தனியா இருக்கும் முதியோர்களை கொல்லவே ஒரு கொள்ளை-கூட்டம் கிளம்பியிருக்கிரதா பேசிக்கிராங்க. இன்னைவரைக்கும் எங்களுக்கெல்லாம் இந்த சம்பவுத்துக்கும் பின்னால் இருக்கும் காரணம் புதிராவே இருக்கு.ஒரு வயசுக்கப்புறம் வெளியூர் - வெளிநாட்டி க்ளைமேட்டெல்லாம் வயதானவர்களுக்கு ஒத்துப்போகிரதில்லை. The extent of paranoia is such that, parents are opting ( literally opting this) to live in an old-age home, rather than to stay by themselves at “their” - “home”.
Read More...
Summary only...