Sunday, October 14, 2007

அழையா விருந்தாளியாய் வந்தார் அனுமார்(ஸ்)

இந்த பதிவுக்கு எவ்வளவு
நட்சத்திரம் குடுக்கலாம்

ங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் ன்னு சொன்னாலும்.. இது ஒரு பூங்கா நகரமாகத் தான் மக்களிடையே பிரபலமா இருக்கு. எங்க வீட்டுக்கு பக்கத்திலேயும் ஒரு அழகான பூங்கா இருக்கு.. ஆனா இங்கே எல்லாரும் எப்பவேணும்னாலும் வரலாம்ன்னு சொல்ல முடியாது. காலையில் 4.30 am - 9.00 am மற்றும் சாயங்காலம் 4.30 pm - 8.30 pm வரை தான் எண்ட்ரி உண்டு.

காலேயிலே உடல்-பயிர்ச்சிக்கு வரும் பெரியவர்கள்- வாலிபர்கள் தான் ஜாஸ்தி.அதே மாதிரி சாயங்காலம் அதிகப்படியா குட்டிப்பசங்களும் சும்மா ரிலாக்ஸ் பண்ணவர ஜோடிகளையும் பார்க்கலாம். மத்தியம் பூங்காவின் காம்பௌண்டை சுத்தி இருக்கும் புங்கை மர நிழலில் அப்பப்போ சில குட்டி -குட்டி பஞ்சாயத்து நடக்கும்.. ( 70+ தாத்தாஸ் நாட்டு நடப்பு பேசும் நேரம் இது.. தெரு சாக்கடை அடைப்பிலிருந்து புஷ் -அவுட்ஸோர்ஸிங்க் - பங்குச்சந்தை.. எல்லாத்தையும் புரட்டி எடுத்துடுவாங்க)... பல Sales Representatives ஐ இங்கே குட்டி தூக்கம் போடுறதையும் பார்க்கலாம்... பூங்கான்னா காதல்-ஜோடிகள் இல்லாம இருக்குமா... இவங்களுக்கும் இங்கே இடம் உண்டு... பக்கத்து போலீஸ் ஸ்டேஷனிலிருந்து யாரும் மோப்பம் பிடிச்சு வராத வரை

இப்படி இந்த பூங்காவை சுத்தியிருக்கும் எங்களை போல residents உம்.. நாங்க உண்டு - பூங்காவில் நடக்கும் ஸீன்ஸ் உண்டுன்னு.. சுமுகமா காலம் தள்ளிகிட்டிருந்தோம்.நேத்தும் எப்பவும் போல தான் பொழுது விடிஞ்சுது... எல்லாரும் அவங்க-அவங்க வேலையிலெ மும்மரமா இருந்தோம்... மத்தியானம் கொஞ்சம் அப்படி கண் அசருவதில்லையா...அப்படி ஒரு 12.30 மணி இருக்கும்... ஒரே கீ கீ சத்தமும் கூடவே டபார்-டபார்ன்னு மொட்டைமாடியிலேயும் ஷேட் மேலே போட்டிருக்கும் ஷீட் மேலேயும் யாரெல்லாமோ ஓடுறா மாதிரி ஒரு சத்தம் கேட்டுது

என்னா- ஏதுன்னு வெளியே வந்து பார்க்க கதவை திறந்தா... ( ரோடிலெ மக்கள்ஸ் கைய்யும் - கம்புமா).. "மேடம் வெளியே வரதீங்க.. சீக்கிரம் கதவை மூடுங்க.. எப்படியோ 8-10 குரங்குகள் நம்ம ஏரியாவிலே வந்திருக்கு... வீட்டுக்குள்ளே வந்திடப்போகுது"... ன்னு திசைக்கொருத்தரா அலறறாங்க...

போன வருஷம் இதே மாதிரி ஒரு பட்டாளம் வந்து எங்க போர்ட்டிகோ பல்பு உடைச்சதை ஞ்யாபகம் வர.... அச்சச்சோ.. பின்னாடி துணி காயப்போட்டிருக்கோமே... (அதுவும் நேத்து ரிசெப்ஷனுக்கு கட்டிகிட்டு போன பட்டு-புடவையை வாசனை சோப்பு போட்டு துணிக்கு நோகுமா- சோப்புக்கு நோகுமோ..ன்னு நானே பார்த்து பார்த்து துவைச்ச்சது)... கலர்-கலரா இருக்குன்னு குறங்கு தூக்கிட்டு போச்யிருச்சுன்னா... (எனக்குள்ளே பீதி)...

நானும் ஒரு கம்பை கையிலெடுத்துகிட்டு ( ஒரு தைரியத்துக்கு தான்) கொல்லபுறமா போனேன்... (ஹப்பாடா... புடவை உட்பட எல்லா துணியும் பத்திரமா இருக்கும்).... கம்பை என்னவர் கையிலெ குடுத்து..காவலுக்கு நிக்க சொல்லி... அவசர-அவசரமா எல்லத்தையும் குரங்குக்கு முன்னாடி நான் சூப்பர்பாஸ்டா எடுத்துட்டேன்.
வெளியே ஒரே கூச்சல்.. ஒருத்தர் கம்பை விடாம கேட்லே அடிக்கிறார்...(தொடர்ந்து சத்தம் போட்டா குரங்கு வராதாம்)... இன்னொருத்தர் ... குப்பைக்கு நெருப்பு வெய்யுங்க.. அனலுக்கு எல்லாம் போயிடும்... ன்னு... பக்கத்து கடையிலே வேலைசெய்யும் பசங்க.." பட்டாசு கொளுத்தினா உடனே அந்த சத்துக்கு எல்லாம் ஓடிடும்... அடுத்த மாசம் தானெ தீபாவளி... இப்போ யாருகிட்டேயும் பட்டசு இருக்காதே"... ன்னு ஒரே ரகளை.. ஆர்பாட்டம
்.எவ்வளவு நேரம் தான் வெளியே நடக்கும் action ஐ வெறும் audio லே கேக்கரது... எனக்குள்ளே ஒரு சின்ன curiosity. வெளியே என்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம். வாசல்-கதவை திறந்து வெளியே போனா... டோஸ் நிச்சயம்... வீட்டு-மனுஷங்க மட்டுமில்லே .. ரோட்டிலே இருக்கிரவங்க கிட்டேயும் திட்டு வாங்கணும்.. அப்படியே நைஸா எஸ்கேப்பாயி.. பால்கணி கதவை திறந்தேன்...
கதவோரமா பார்தா.. ஒரு குரங்கு மும்மரமா (பக்கத்து வீட்டு) பப்பையா சப்பிடுது - 2 குட்டீஸ் தென்னமர ஓலையிலே tarzan விளையாடுது. டேபிளிலே வச்ச என் கேமேரா என்ன பார்த்து குறும்பா சிரிக்க...எனக்கு கை நம நமன்னு அரிக்க ஆரம்பிச்சிடுத்து... படார்ன்னு கேமேராவை எடுத்து பால்கணிக்கு போயிட்டேன்...( உடனே கதைவயும் சாத்தி தாழ் போட்டுட்டேன்.. என்னானாலும் குரங்கு வீட்டுக்குள்ளே போகக்கூடாதில்லே)... அப்படி போச்சுன்னா எனக்கு தானே டோஸ்...
திடீர்ன்னு நான் கதவை திறந்து-சாத்தினதாலையோ என்னமோ... குரங்கெல்லாம் ஒரே தாவா பக்கத்து காம்புண்டுக்கு தாவிடுச்சு.. ஒரு முறை பப்பையாவை ருசி பார்த்த குரங்கு மறுபடியும் வரதான்னு நானும் chair லே செட்டிலாயிட்டேன
்... 15 ஏ நிமிஷம் தான்... ஒவ்வொருத்தரா ( மனுஷங்க இல்லை குரங்கு தான் )பால்கணிக்கு வர ஆரம்பிச்சாங்க... ( எங்க பால்கணியிலே grill போட்டிருக்கோம்).. ஜூ லே பார்க்கிர மாதிரி என்னை கம்பிக்கு வெளியே இருந்து பார்த்து..... "" இந்த பிராணி நம்மை ஒண்ணும் பண்ணாது "" ன்னு தொணியிருக்கும்... பால்கணிக்கு உள்ளேயே வந்து விளையாட ஆரம்பிச்சிட்டங்க.... ( வெளியே நல்ல 2.00 மணி வெய்யில்... அதுக்கு இந்த பாக்லணி நிழலா இருக்குன்னு தோணியிருக்கும்)..
மொத்த வானரப்படையில் ரெண்டு குட்டீஸ் ரொம்பவும் adventurous . அப்படி - இப்படி தைரியத்தை வரவழிச்சு என் கைக்கெட்டும் தூரம் வரை வந்தது.. நான் அப்படியே சிலையாட்டம் இருந்தேன்.. என்னதான் பண்ணுதுன்னு பார்க்கலாமேன்னு ஒரு (அசட்டு) தைரியம்..maternal instinct ன்னு சொல்லுவாங்களே,.. அது மாதிரி.. சரியான நேரத்துக்கு இதோட அம்மா / அப்பா கூரங்கு வந்து கண்டிக்கிரா மாதிரி ஒரு குரல் குடுத்தது்குடுத்தது.. குட்டியும் ஓடிப்போயிடுச்சு
இதிலே பக்கத்து காய்கறி கடையிருந்து தக்காளி- பழம் - வெள்ளிரிக்காய் எல்லாம் அபேஸ் - கூட்டத்திலிருது தனிப்பட்டு போன குட்டி குரங்க 5-6 தெருநாய் சேர்ந்து துரத்த... ஸீனியர் குரங்கு போய் மீட்டுக்கிட்டு வந்தது..ன்னு பல எபிஸோட்
ஒரு வழியா 3 - 4 மாணியாச்சு எல்லா குரங்கையும் விரட்ட... குபைக்கு நெருப்பு வச்சப்புறம் தான் போச்சு.இப்படி இதுங்க விளையாடும் போது க்ளிக்கின படங்கள் தான் இதெல்லாம்... கிட்டதட்ட 36 படம் photographic evidence இருக்கு.. Batch- 1 மற்றும் Batch-2 ஐ க்ளிக்கி பார்த்து ரசிங்க...உங்க கருத்தையும் சொல்லுங்க

15 comments:

said...

கடைசிக்கு முதல் படம் ஏதோ உங்களுக்கு மட்டும் பிரத்யோகம்மாக கொடுத்த மாதிரி இருக்கு.
ஆமாம்! கேமிரா கையில் இருக்கும் போது கம்பை என்ன செய்தீர்கள்?

said...

தீபா.
படங்களும் அனுமார் வர்ணனையும் பிரமாதம்.
தைரியமா அழகா போட்டோ எடுத்து இருக்கீங்க.
ஒரு வேளை குரங்குகள் திருமணம் நடந்து இருக்குமோ:))))

said...

குரங்குக்குட்டிகள் ரொம்ப அழகா இருக்கு. நல்லா எடுத்துருக்கீங்க அதுங்கள பயப்படுத்தாம நல்லா எடுத்துருக்கீங்க

said...

வாங்க குமார்..
நீங்க சொல்லரது ரொம்ப கரெக்ட்.. 2 படத்துக்கும் grill க்கு வெளியே கைய்யை விட்டு எடுத்தேன்.. (நடுவிலே கம்பி வரக்கூடாதில்லையா)..நல்லவேளை ஆல் குரங்க்ஸ் பிசி.. இல்லைன்னா.. நான் கை வெளியே விடவும்.. கேமேராவை புடுங்கவும் எவ்வளவு நேரமாயிருக்கும்

லின்க் லே இருக்கும் மத்த படத்தையும் பார்த்தீங்களா ? ? ?

said...

வாங்க வல்லிசிம்ஹன்
பாராட்டுக்கு நன்றி..
///ஒரு வேளை குரங்குகள் திருமணம் நடந்து இருக்குமோ:///
ம்ம்.. இருக்கலாம்.. ஆனா அது என்னமோ ஒரு பேமேலி-பிக்னிக் மாதிரி தான் இருந்துது

said...

சின்ன அம்மிணி..
வாங்க.. அம்மாம்.. குட்டீஸ் ரொம்ப சீக்கிரம் பயந்துக்கும்.. சும்மா சூ ன்னு சொன்னாலெ அம்மா பின்னாலே ஒளிஞ்சுக்கும்..
லிண்க்லே பாருங்க குட்டீஸ்க்குன்னே நிறைய படம் இருக்கு.. பல போஸ்லே

அதான் wild life photography எடுக்கிரவங்க சொல்லுவாங்க to gain confidence ... முடிஞ்ச வரை எந்தவித திடீர் அசைவுகள் குடுக்காம இருக்கணும்..(MSc Thesis prepare் பண்ணும்போது ஏதோ ஒரு refrence புத்தகத்திலே படிச்சது)

said...

Is that the moneys on your Photoblog?

said...

Yes Jeevan.. they are the same group..I have narrated the incident here.. thats all.. and the pics dispayed are small..to occupy the text

said...

/ஜூ லே பார்க்கிர மாதிரி என்னை கம்பிக்கு வெளியே இருந்து பார்த்து..... "" இந்த பிராணி நம்மை ஒண்ணும் பண்ணாது "" ன்னு/

ha.. ha.. அதுக்கு என்னவொரு நம்பிக்கை! வீன் போகலே.

இது போல நம்மையெல்லாம் பாத்து வேறு என்னென்ன நினைக்குமோ?

நல்ல எபிசோட் :)

said...

வாங்க குமார்
///இது போல நம்மையெல்லாம் பாத்து வேறு என்னென்ன நினைக்குமோ///
இது தெரிஞ்சா animal-right activists ங்க்ர பேர்லே சவுண்ட் விடுரவங்களை ஒரு கை பார்த்துடலாமில்லே..

said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

Anonymous said...

என்ன தீபாம்மா
வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்பிடித்தான் கம்பு எடுத்து விரட்டுவீங்களா? வாயில்லா
ஜீவன் மனத்திற்குள் திட்டியிருக்கும்.
வாய் உள்ளதுகளுக்கும் கம்பு தூக்கிப்
பாருங்க. கடிச்சுகுத்றிப்போடுங்க.
ராஜி

said...

வாங்க ராஜி..
திபாவளி ஷாப்பிங் எல்லாம் ஆச்சா ? ?
///வீட்டுக்கு வந்த விருந்தாளியை இப்பிடித்தான் கம்பு எடுத்து விரட்டுவீங்களா?///
நான் எங்க விரட்டுறதுக்கு கம்பெடுத்தேன்.. ஒரு தைடியத்துக்குன்னு தானே சொல்லியிருக்கேன் நானும் ஒரு கம்பை கையிலெடுத்துகிட்டு ( ஒரு தைரியத்துக்கு தான்)

////வாய் உள்ளதுகளுக்கும் கம்பு தூக்கிப்
பாருங்க. கடிச்சுகுத்றிப்போடுங்க////
ரொமப் சரி.. ரத்தம் சிந்தாமலேயே "கடிச்சு குதறிப்போட்டும்"

said...

நன்றி தீபாம்மா,
முன்கூட்டிய தீபாவளி வாழ்த்துக்கள்.உங்களின் batch-2
படங்களைப் பார்த்த என் உறவுக்கார
குழந்தைகள் மிக ஆனந்தப்பட்டார்கள்.
பூக்களையும்,விலங்குகளையும்,
குழந்தைகளையும் ரசிக்கத்தெரியாதவர்கள் மனிதர்களேயல்ல.
விலங்குகளைக்கூட ரசித்துபடமாக்கி
மற்றவர்களும் பார்க்கவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணத்திற்கு
வாழ்த்து.குழ்ந்தைகள் படிக்க ரசிக்க
மேலும் நல்லது பண்ணுங்களேன்.

ராஜி

said...

ராஜி..
பாரட்டுக்கு ரொம்ப நன்றி.. உங்க உறவுக்கார குழந்தைகளுக்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்துக்கள்... to write something light தான் என் நோக்கம்.. ஆனா என்ன பண்ண சொல்லுங்க பல நேரத்திலே டெக்னிகல்-பதிவாயிடுது.. ஆனாலும் அப்பப்போ முயர்ச்சி பண்ணிகிட்டு தான் இருக்கேன்.. hopefully i will suceed..

பூக்களை ரசிக்க பிடிக்கும்ன்னா இங்கேயும் பார்க்கலாம்.. பங்களூர்- மலர்-கண்காட்சியில் எடுத்தது
Exhibit - 1 ... Exhibit-2